காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே பின்னணியும் பாடி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கடந்த மாதம் கோலாலம்பூரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அடுத்தபடியாக ஜூலை ஒன்றாம் தேதி கோவையில் ஆண்ட்ரியா லைவ் இன் கோவை என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். அது குறித்த தகவலை அவர் கூறுகையில், முதல் முறையாக கோவையில் தனி இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறேன். வருகிற ஜூலை ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடைபெற உள்ளது. இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாட உள்ளேன். அதோடு நான் பாடியதில் ஹூ இஸ் தி ஹீரோ, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உள்பட பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. மேலும், எந்த விஷயமும் எளிதில்லை. அனைத்திலுமே ஒருவித கஷ்டம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மியூசிக் படித்து வருகிறேன். அதுதான் இப்போது என்னை பாட வைக்கிறது. எனது இசை நிகழ்ச்சிக்கு கோவையில் நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ள ஆண்ட்ரியா, ஊ சொல்றியா மாமா என்ற பாடலையும் பாடி தனது பேட்டியை முடித்துக் கொண்டுள்ளார்.