சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பட்டிமன்ற பேச்சாளர் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் 'அழகிய கண்ணே'. இயக்குனர் சீனு ராமசாமியின் தம்பி ஆர்.விஜயக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் லியோ சிவகுமார் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். பட விழாவில் சஞ்சிதா ஷெட்டி பேசியதாவது:
பத்திரிகையாளரை சந்திக்க போகிறேன் என்றால் திருமண வீட்டுக்கு செல்வதை போல மகிழ்ச்சியுடன் என்னை அலங்கரித்துக் கொண்டு செல்வேன். நான் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும், சந்தித்தாலும், சந்திக்காவிட்டாலும் என்னை பற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எழுதுகிறார்கள். என்னை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவர்களுக்கு என் நன்றிகள்.
நான் சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிறது. நான் புதிய இயக்குனர்கள், புதிய நடிகர்களுடன் நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்கிற செண்டிமென்ட் இருக்கிறது. இந்த படத்திலும் புது இயக்குனர், புது நடிகர்தான் எனவே இந்த படமும் வெற்றி பெறும். நான் 15 புதிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நான் மாணவி, காதலி, மனைவி, தாய் என்கிற 4 பரிமாணங்களில் நடித்திருக்கிறேன்.
இது உதவி இயக்குனர்களின் கதை. இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனராக இருந்தபோது கிடைத்த அனுபவங்களை கொண்டுதான் இந்த படத்தை இயக்கி உள்ளார். படப்பிடிப்பின்போது நெருக்கமான நண்பர்களாகிறவர்கள் உதவி இயக்குனர்கள். அப்படி நண்பர்களாகும்போது அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கை பற்றி சொல்வார்கள் அது வருத்தமாக இருக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குனர்களும் பல கஷ்டங்களை கடந்து வந்தவர்கள்தான். மதுரையில் இருந்து இயக்குனராகும் கனவுடன் சென்னை வந்த ஒரு இளைஞனை பற்றிய கதைதான் இந்தப் படம்.
நாயகன் சிவா குடும்பம் எப்போதும் செட்டில் இருப்பார்கள். என் அம்மாவிடம் என்னை ஏஞ்சல் போலப் பார்த்துக் கொள்கிறார்கள் என்றேன். ஷூட்டிங் அனுபவம் அப்படி தான் இருந்தது. எனக்கு மிக முக்கியமான பாத்திரம், ஐடியில் வேலை பார்க்கும் சென்னைப் பெண், என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.