நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், 'புஷ்பா' சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து நடிக்கின்றனர். சுசீந்திரன் இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார், வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் விசாரணை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். நாடக குழு தலைவராக பாரதிராஜா நடிக்கிறார். 1980 கால கட்ட கதை என்பதால் திண்டுக்கல் நகரில் அந்த காலகட்ட பின்னணியைக் கொண்டு வரும் வகையில், பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, கொடைக்கானல், சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நடந்தது.
தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் நடந்து வருகிறது. இங்கு தொடர்ந்து 24 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாதத்துடன் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டிற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.