இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், 'புஷ்பா' சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து நடிக்கின்றனர். சுசீந்திரன் இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார், வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் விசாரணை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். நாடக குழு தலைவராக பாரதிராஜா நடிக்கிறார். 1980 கால கட்ட கதை என்பதால் திண்டுக்கல் நகரில் அந்த காலகட்ட பின்னணியைக் கொண்டு வரும் வகையில், பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, கொடைக்கானல், சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நடந்தது.
தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் நடந்து வருகிறது. இங்கு தொடர்ந்து 24 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாதத்துடன் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டிற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.