தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னையில் படித்து, வளர்ந்து, தமிழ் படம் இயக்கினாலும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் பூர்வீகம் கேரளா. தமிழில் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன் பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துசரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா? நீதான என் பொன் வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அவர் இயக்கிய துருவ நட்சத்திரங்கள் படம் இன்னும் வெளிவரவில்லை.
தற்போது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் முதன் முதலாக தனது சொந்த மொழியில் படம் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'பஜூக்கா' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். மம்மூட்டியிடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். அவருடன் நடித்த 10 நாட்களும் சிறந்த அனுபவம். மலையாளத்தில் பெரிய நடிகர்கள் கூட சாதாரண கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அடுத்த வருடம் மலையாளத்தில் படம் இயக்குவேன். அதற்காக பேசி வருகிறேன். என்றார்.