'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவரது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஸ்ரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூரரைப்போற்று, வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி இணைகிறாராம். இவர் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்டுள்ள மாதிரி பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 1ம் தேதி துவங்கும் என்கிறார்கள்.