'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை இயக்கியவர் சுதீப்டோ சென். இப்படத்தை விபுல் ஷா என்பவர் தயாரித்தார். இந்த படத்தில் 32 ஆயிரம் இந்து பெண்களை இஸ்லாம் மதமாற்றம் செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாக கதை உருவாக்கப்பட்டதால் பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தது. சில மாநிலங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் தடை விதித்தார்கள். என்றாலும் இது புனையப்பட்ட கதை என்று இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால், கருத்து சுதந்திர அடிப்படையில் இந்த படத்தை இந்தியா முழுக்க வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியது. இப்படம் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்த நிலையில் அடுத்தபடியாக இந்த கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் சுதீப்டோ சென் என்பவர் இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் பற்றிய கதையில் அடுத்த படத்தை இயக்குவதாக அறிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளார்.