'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி | பராசக்தி பட சஸ்பென்ஸ் எது? | பிளாஷ்பேக் : ஜல்லிக்கட்டுக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு படம் | பிளாஷ்பேக்: முதல் 'ஜல்லிக்கட்டு' படம் | சண்டை காட்சியில் எஸ்.ஜே.சூர்யா படுகாயம் : கில்லர் படப்பிடிப்பு நிறுத்தம் | 'ஜனநாயகன்' பட்ஜெட் 500 கோடி: நீதிமன்றத்தில் தகவல் | விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் |

தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை இயக்கியவர் சுதீப்டோ சென். இப்படத்தை விபுல் ஷா என்பவர் தயாரித்தார். இந்த படத்தில் 32 ஆயிரம் இந்து பெண்களை இஸ்லாம் மதமாற்றம் செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாக கதை உருவாக்கப்பட்டதால் பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தது. சில மாநிலங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் தடை விதித்தார்கள். என்றாலும் இது புனையப்பட்ட கதை என்று இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால், கருத்து சுதந்திர அடிப்படையில் இந்த படத்தை இந்தியா முழுக்க வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியது. இப்படம் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்த நிலையில் அடுத்தபடியாக இந்த கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் சுதீப்டோ சென் என்பவர் இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் பற்றிய கதையில் அடுத்த படத்தை இயக்குவதாக அறிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளார்.