விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

தி கேரளா ஸ்டோரி என்ற படத்தை இயக்கியவர் சுதீப்டோ சென். இப்படத்தை விபுல் ஷா என்பவர் தயாரித்தார். இந்த படத்தில் 32 ஆயிரம் இந்து பெண்களை இஸ்லாம் மதமாற்றம் செய்து தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியதாக கதை உருவாக்கப்பட்டதால் பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்தது. சில மாநிலங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கும் தடை விதித்தார்கள். என்றாலும் இது புனையப்பட்ட கதை என்று இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால், கருத்து சுதந்திர அடிப்படையில் இந்த படத்தை இந்தியா முழுக்க வெளியிடுவதற்கு அனுமதி வழங்கியது. இப்படம் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 200 கோடிக்கும் மேல் வசூலித்தது. 
இந்த நிலையில் அடுத்தபடியாக இந்த கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் சுதீப்டோ சென் என்பவர் இந்தியாவில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் பற்றிய கதையில்  அடுத்த படத்தை இயக்குவதாக அறிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளார்.