'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபத்தில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பிய படம் "தி கேரளா ஸ்டோரி". அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். கேரளாவில் பெண்களை மதமாற்றம் செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது மாதிரியான கதைகளத்தில் வெளியானது. பல மாநிலங்களில் எதிர்ப்பு, சர்ச்சை, தடைகளை கடந்து இந்தப்படம் ரூ.200 கோடி வசூலை சந்தித்தது.
சித்தி இத்னானி அளித்த பேட்டி ஒன்றில் தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ''தி கேரளா ஸ்டோரி படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இது வழக்கமான கமர்ஷியல் சினிமா இல்லை என்பது புரிந்து இப்படம் வெளியாகும்போது எந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்ற கேள்விகளும் என் மனதில் ஏற்பட்டது. இதே உணர்வில் தான் மற்றவர்களும் இருந்தார்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் மையக்கரு பார்வையாளர்களுக்கு சென்றால் இந்த படத்தை எடுத்த நோக்கத்தை நிறைவேற்றும். இதனை ஆலோசித்தே படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்'' என்றார்.