'மெய்யழகன்' ஆன கார்த்திக் | ஒரு கோடி கேட்டு கார்த்திக் குமார் மானநஷ்ட வழக்கு : சுசித்ராவிற்கு கோர்ட் விதித்த தடை | கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட கல்லூரி மாணவர்கள் சாதனை | நடிகை லைலா கான் கொலை வழக்கு : வளர்ப்பு தந்தைக்கு துாக்கு | 11வது நினைவு நாள் : எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு தனி தனி குரலில் பாடாத டி.எம்.சவுந்தர்ராஜன் | தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி |
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவில் உள்ள இளம் பெண்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு தீவிரவாதிகளாக அனுப்பப்படுகிறார்கள் என்ற கதை அம்சத்துடன் இந்த படம் வெளியாகி இருந்தது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் வெளியாகவில்லை. சில மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்தது.
சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி, சித்னி இத்னானி உட்பட பலர் நடித்த படம். படத்திற்கு எதிர்ப்பு, ஆதரவு இருந்தாலும் படம் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் புரிந்தது. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட அதன் தயாரிப்பாளர் முயற்சித்து வருகிறார். ஆனால் படத்தை வாங்க எந்த ஒடிடி தளங்களும் முன்வரவில்லையாம்.
இந்த படத்தை வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சந்தாதாரர்களை இழக்க வேண்டியது வருமோ என்று தயங்குவதாக தெரிகிறது. பலகோடி செலவில் நடத்தப்படும் ஓடிடி தளங்கள் ஒரு படத்திற்காக தங்கள் முதலீட்டை ரிஸ்கில் விட முன்வராது என்று ஓடிடி தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.