அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா | 'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? |

கோல்கட்டாவில் இருந்து கடந்த வாரம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 275க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றார்கள். ஆனபோதிலும் அங்கு பிரதமர் வர இருந்ததால் விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட முடியாமல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி அவருக்கு எதிராக ஒரு விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில், 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி தன்னை மாற்றிக் கொள்கிறார். ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார்' என டுவிட்டரில் பதிவிட்டுளளார்.