பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
கோல்கட்டாவில் இருந்து கடந்த வாரம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 275க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றார்கள். ஆனபோதிலும் அங்கு பிரதமர் வர இருந்ததால் விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட முடியாமல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி அவருக்கு எதிராக ஒரு விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில், 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி தன்னை மாற்றிக் கொள்கிறார். ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார்' என டுவிட்டரில் பதிவிட்டுளளார்.