பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

கோல்கட்டாவில் இருந்து கடந்த வாரம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 275க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றார்கள். ஆனபோதிலும் அங்கு பிரதமர் வர இருந்ததால் விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட முடியாமல், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பியதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி அவருக்கு எதிராக ஒரு விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில், 'சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி தன்னை மாற்றிக் கொள்கிறார். ரயில் விபத்து மீட்பு பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார்' என டுவிட்டரில் பதிவிட்டுளளார்.