பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம், 'ஜவான்'. நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று இந்த படம் வெளியாகிறது.
சமீபத்தில் பிரியாமணி அளித்த பேட்டி ஒன்றில் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக நடிக்கும் அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்; “இதற்கு முன் அவர் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தேன். அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அவர் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா என்ற யோசனையில் இருந்தேன். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் என்னைப் பார்த்ததும் வழக்கம்போல கட்டியணைத்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தினமும் பல பிரபலங்களை ரசிகர்களை சந்திக்கும் அவர் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய என்னை ஞாபகம் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று இவ்வாறு கூறினார்.