எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 2'.
சுமார் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இந்தப் படம் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் தனி கட்டணம் செலுத்தி பார்க்கும் முறையில் வெளியானது. இப்போது அமேசான் சந்தாதார்கள் தனி கட்டணம் செலுத்தாமல் பார்க்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் வெளியாகியுள்ளது. ஹிந்தி மொழியில் எப்போது வெளியாகும் என்பது தெரியவில்லை.
கல்கி எழுதிய நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார். முதல் பாகம் 2022ம் வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்பின் ஒரு மாதம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியானது. இப்போது படத்தின் இரண்டு பாகங்களும் ஓடிடி தளத்தில் உள்ளதால் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் இரண்டு பாகங்களையும் பார்த்து ரசிக்கலாம்.