காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது மூத்த மகள் இயக்குனர் ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‛ஜெய் பீம்' பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். போலி என்கவுன்டர் தொடர்புடைய கதைக்களத்தில் இந்தப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. கணிசமான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க சம்மதம் சொல்லவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
சமீபகாலமாக நடிகர் அர்ஜுன் குணச்சித்ரம் மட்டுமல்லாது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடிக்கிறார். அடுத்து ரஜினி படத்திலும் வில்லனாக நடிக்க போகிறார்.