மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது மூத்த மகள் இயக்குனர் ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‛ஜெய் பீம்' பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். போலி என்கவுன்டர் தொடர்புடைய கதைக்களத்தில் இந்தப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. கணிசமான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க சம்மதம் சொல்லவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
சமீபகாலமாக நடிகர் அர்ஜுன் குணச்சித்ரம் மட்டுமல்லாது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடிக்கிறார். அடுத்து ரஜினி படத்திலும் வில்லனாக நடிக்க போகிறார்.