அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே | எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது | ''மோகன்லால், விக்ரமுக்கு ஒரு ஹிட்; எனக்கு ரெண்டு ஹிட்'': மகிழ்ச்சியில் சுராஜ் வெஞ்சாரமூடு | எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு |
ஜெயிலர் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது மூத்த மகள் இயக்குனர் ஜஸ்வர்யா இயக்கத்தில் ‛லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ‛ஜெய் பீம்' பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். போலி என்கவுன்டர் தொடர்புடைய கதைக்களத்தில் இந்தப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடந்தது. கணிசமான சம்பளம் தருவதாக கூறியும் அவர் நடிக்க சம்மதம் சொல்லவில்லை. இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் உடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
சமீபகாலமாக நடிகர் அர்ஜுன் குணச்சித்ரம் மட்டுமல்லாது வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடிக்கிறார். அடுத்து ரஜினி படத்திலும் வில்லனாக நடிக்க போகிறார்.