20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
'கடலோர கவிதைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேகா. அதன் பிறகு புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, சொல்வதெல்லாம் உண்மை, ஆண்களை நம்பாதே, எங்க ஊரு பாட்டுக்காரன், சின்னமணிக்குயிலே, செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, என் பொம்முட்டி அம்மாவுக்கு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். 1986ல் அறிமுகமான ரேகா, 2000மாவது ஆண்டில் இருந்து குணசித்ர நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 20 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார். 'மிரியம்மா' என்ற இந்த படத்தில் டைட்டில் ரோலான மிரியம்மாவாக நடிக்கிறார்.. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்குகிறார். ரேகாவுடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். 72 பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.