சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா தற்போது மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பழநி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.
அதில் அவர் கூறுகையில், ''பழநி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மார்கழி திங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிகப்பெரிய கேமராவை வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று புயல் காற்று வீசி கனமழை பெய்தது. அப்போது பெரிய பெரிய லைட்டுகள் எல்லாம் கீழே விழுந்தன. ஒரு லைட்டின் மீது இடி தாக்கியது. அப்போது அதன் அருகில் நின்று கொண்டிருந்த லைட்மேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்'' என்று அந்த விபத்து குறித்த ஒரு தகவலை வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் சுசீந்திரன்.