மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா தற்போது மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பழநி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.
அதில் அவர் கூறுகையில், ''பழநி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மார்கழி திங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிகப்பெரிய கேமராவை வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று புயல் காற்று வீசி கனமழை பெய்தது. அப்போது பெரிய பெரிய லைட்டுகள் எல்லாம் கீழே விழுந்தன. ஒரு லைட்டின் மீது இடி தாக்கியது. அப்போது அதன் அருகில் நின்று கொண்டிருந்த லைட்மேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்'' என்று அந்த விபத்து குறித்த ஒரு தகவலை வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் சுசீந்திரன்.