மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பஷில் ஜோசப் இயக்கத்தில், டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மின்னல் முரளி'.
மின்னல் தாக்கியதால் கிடைத்த சக்தியை வைத்து படத்தின் நாயகனும், வில்லனும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதை. அந்தப் படத்தைப் போலவே மின்னல் தாக்கியதால் கிடைக்கும் சக்தியை வைத்து நாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் 'வீரன்' படத்தின் கதை என்று மட்டும் படக்குழுவினர் இதுவரை தெரிவித்து வந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா, வினய், ஆதிரா ராஜ் மற்றும் பலர் நடிப்பில், எஆர்கே சரவண் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் வெளிவர உள்ள படம்தான் 'வீரன்'.
'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்காகத்தான் 'வீரன்' படத்தை எடுத்துள்ளார்கள் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் வந்தது. அதற்கு அப்டேட் கொடுக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் அறிவிக்க உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் உடன் ஆதி, எஆர்கே சரவண் ஆகியோர் வீடியோ காலில் பேசுவது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் வீரன் பட டிரைலர் பார்த்தேன். மின்னல் முரளி போன்று இருப்பதாக கலாய்த்த பஷில் பின்னர் இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படம் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதன்மூலம் 'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்கா 'வீரன்' என்பதற்கான விடையும் தெரிந்துவிட்டது.