தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
பஷில் ஜோசப் இயக்கத்தில், டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம், பெமினா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மின்னல் முரளி'.
மின்னல் தாக்கியதால் கிடைத்த சக்தியை வைத்து படத்தின் நாயகனும், வில்லனும் என்ன செய்கிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதை. அந்தப் படத்தைப் போலவே மின்னல் தாக்கியதால் கிடைக்கும் சக்தியை வைத்து நாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் 'வீரன்' படத்தின் கதை என்று மட்டும் படக்குழுவினர் இதுவரை தெரிவித்து வந்தார்கள். ஹிப்ஹாப் தமிழா, வினய், ஆதிரா ராஜ் மற்றும் பலர் நடிப்பில், எஆர்கே சரவண் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் வெளிவர உள்ள படம்தான் 'வீரன்'.
'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்காகத்தான் 'வீரன்' படத்தை எடுத்துள்ளார்கள் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகள் வந்தது. அதற்கு அப்டேட் கொடுக்கும் விதமாக இன்று மாலை 6 மணிக்கு படக்குழுவினர் அறிவிக்க உள்ளதாக அறிவித்தனர்.
அதன்படி மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் உடன் ஆதி, எஆர்கே சரவண் ஆகியோர் வீடியோ காலில் பேசுவது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் வீரன் பட டிரைலர் பார்த்தேன். மின்னல் முரளி போன்று இருப்பதாக கலாய்த்த பஷில் பின்னர் இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படம் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதன்மூலம் 'மின்னல் முரளி' படத்தின் ரீமேக்கா 'வீரன்' என்பதற்கான விடையும் தெரிந்துவிட்டது.