கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை துஷாரா விஜயன். இதை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், " நான் படங்களில் தேர்வு செய்து நடிப்பதில் எப்பொழுதும் கவனமாக இருப்பேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் கவிதா என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம்.
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக அறிவித்துள்ளனர். அதில் நான் இருந்தால் சந்தோஷப்படுவேன். அழைப்புக்காக காத்திருக்கிறேன். அதேபோல் கதையும் கதாபாத்திரமும் எனது வசதிக்கு உட்பட்டு இருந்தால் கவர்ச்சியாக கூட நடிப்பேன். அதேபோல் அதிரடியாக சண்டை போடும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. சில படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழுகின்றன. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்."
இவ்வாறு தெரிவித்துள்ளார்.