புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் |
கடந்த 2019 ஆண்டில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் ‛அடங்க மறு'. இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி திரைப்படமாக மாறியது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் தங்கவேல் கடந்த மூன்று வருடங்களில் நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோருடன் கதை கூறி காத்திருந்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் ஜெயம் ரவிக்கு கதை கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க ஜெயம் ரவியும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.