பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தி கேரளா ஸ்டோரி என்ற படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடை போட்டார்கள். அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதை அடுத்து தி கேரளா ஸ்டோரி படத்தை அனைத்து மாநிலங்களும் வெளியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதோடு இப்படம் இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தொடர்ந்து ரசிகர்களுடைய ஆதரவினை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த கேரளா ஸ்டோரி படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல. பிரச்சார படங்களுக்கு நான் எப்போதுமே எதிரானவன் என்று கூறி இருக்கிறேன். உண்மை கதை என்று படத்தில் கூறினால் மட்டும் போதாது. அது உண்மையாகவும் இருக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.