பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகங்களுக்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த பாவனா தற்போது பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். பிங்க் நோட், கேஸ் ஆப் கொன்டனா என்ற கன்னட படங்களிலும் 'ஹன்ட்' என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுமானுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி உள்ளது. இதில் ரகுமான் போலீஸ் அதிகாரியாகவும், பாவனா தடயவியல் மருத்துவராகவும் நடிக்கிறார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். புதுமுக டைரக்டர் ரியாஸ் மாரத் டைரக்டு செய்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தை அதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.