'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சூரி, அதையடுத்து கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி உள்ள கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்திலும், இன்னும் சில படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூரி, அங்குள்ள சிப் லைனில் அவர் சாகச பயணம் செய்திருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு, இவற்றைப் பொறுத்து உங்கள் மகிழ்ச்சி என்று அவர் பதிவிட்டுள்ளார்.