20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கும் தனது 34வது படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் ஜூன் முதல் வாரத்தில் துவங்குகிறது. படப்பிடிப்பை துவங்கும் முன்பே இந்த படத்திலிருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யோகி பாபு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.