வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அந்தாலஜி தொடர் 'மார்டன் லவ் சென்னை', இதில் ராஜு முருகன் இயக்கிய 'லால்குண்டா பொம்மைகள்' என்ற கதையில் ஷோபா என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஸ்ரீ கவுரி பிரியா. இவர் சினிமாவுக்கு புதிதில்லை. மிஸ்.ஹதராபாத்தாக தேர்வு பெற்ற இவர் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ரைட்டர் பத்மபூசன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார். இப்போது இந்த அந்தாலஜி படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
“தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. லால்குண்டா பொம்மையில் அக்மார்க் சென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். நடிப்புக்கு கிடைத்து வரும் பாராட்டுகள் பெரிய நம்பிக்கை தருகிறது. தற்போது இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு தரப்பே வெளியிடுவார்கள். மேலும் கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கவுரி பிரியா.