காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஐதராபாத் : உடல்நலம் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு(71) இன்று(மே 22) காலமானார்.
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவாக, குணச்சித்ர நடிகராக ஏராளமான படங்களில் நடித்தவர் சரத்பாபு (71). 1977ம் ஆண்டு 'பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மெட்டி, முள்ளும் மலரும், உதிரிபூக்கள், சட்டம், சங்கர் குரு வேலைக்காரன், முத்து, அண்ணாமலை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம் என 200 திரைப்படங்களிலும், 'டிவி' தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், உடல் உறுப்பு நோய் அழற்சி பிரச்னை காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழந்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று(மே 22) சிகிச்சை பலன் இன்றி அவர் மறைந்தார்.
சரத்பாபுவின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரத்பாபுவின் உடல் ஐதராபாத்தில் பிலிம்சேம்பரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மேல் சென்னை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். நாளை(மே 23) சென்னையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.