சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாகவும், குணச்சித்ர வேடங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு. உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் நேற்று காலமானார். தெலுங்கு பிலிம் சேம்பரில் நேற்று அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. இங்கு அவரின் தி.நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
ரஜினி, ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா, பாக்யராஜ், சூர்யா, கார்த்தி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரத்பாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
செந்தாழம்பூவில் வந்தாண்டிய தென்றல் என பாடியவர் காற்றில் கரைந்து போனார்.