இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த வாரம் அவரது நண்பரான பர்ஹான் பின் லியாகத் என்பவருக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இன்ஸ்டாகிராம் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதன்பிறகு அவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலன் என இணையதளங்களிலும், யு டியுப் தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் ஒரு ஆங்கில இணையதளத்தின் செய்தியைப் பகிர்ந்து அதற்கு பதிலளித்துள்ளார்.
“ஹஹஹஹா இந்த நேரத்தில் எனது அன்பான நண்பரை இழுக்க வேண்டியதில்லை. உண்மையான மர்ம மனிதரை நான் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்துவேன். அதுவரை “சில் பில்” ஆக இருங்கள். குறிப்பு - ஒரு முறை கூட சரியாக வரவில்லையா,” என கிண்டலடித்து பதிலளித்துள்ளார்.
ஆங்கில இணையதளம் 'மர்ம மனிதர்' என்ற அர்த்தத்தில் 'மிஸ்டரி மேன்' என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தது. அதற்குத்தான் கீர்த்தி சுரேஷ் மேலே சொன்னபடி தன்னுடைய பதிலைப் பதிவு செய்துள்ளார்.