கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
நடிகர் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கடந்த வருடமே அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 55 நாட்கள் கொண்ட மிக நீண்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.
ஆனால் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊர்களில் கலை விழாக்கள் நடைபெற இருக்கின்றன. அதனால் இதற்கான பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட சிலவற்றை காரணம் காட்டி காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை நடத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர், இதனை தொடர்ந்து வேறு வழியின்றி படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.