பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகர் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கடந்த வருடமே அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் 55 நாட்கள் கொண்ட மிக நீண்ட படப்பிடிப்பிற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.
ஆனால் வரும் செப்டம்பர் மாதம் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஊர்களில் கலை விழாக்கள் நடைபெற இருக்கின்றன. அதனால் இதற்கான பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட சிலவற்றை காரணம் காட்டி காஷ்மீரில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பை நடத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர், இதனை தொடர்ந்து வேறு வழியின்றி படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி உள்ளனர்.