மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சரவணன் இயக்கத்தில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' படத்தில் தமிழில் பிரபலமானவர் சர்வானந்த். தெலுங்கு நடிகரான அவர் அதற்கு முன்பு ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம்தான் பிரபலமானார். அதற்குப் பிறகு 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை', கடந்த வருடம் வெளிவந்த 'கணம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சர்வானந்த்திற்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே பிரிந்துவிட்டதாகத் தகவல் பரவியது. அதற்கு சர்வானந்த் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள். கடந்த 40 நாட்களாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படத்திற்காக லண்டன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜுன் மாதம் 3ம் தேதி ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் சர்வானந்த், ரக்ஷிதா திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்குத் திரையலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.