‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
சரவணன் இயக்கத்தில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' படத்தில் தமிழில் பிரபலமானவர் சர்வானந்த். தெலுங்கு நடிகரான அவர் அதற்கு முன்பு ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம்தான் பிரபலமானார். அதற்குப் பிறகு 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை', கடந்த வருடம் வெளிவந்த 'கணம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சர்வானந்த்திற்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே பிரிந்துவிட்டதாகத் தகவல் பரவியது. அதற்கு சர்வானந்த் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள். கடந்த 40 நாட்களாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படத்திற்காக லண்டன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜுன் மாதம் 3ம் தேதி ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் சர்வானந்த், ரக்ஷிதா திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்குத் திரையலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.