நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
சரவணன் இயக்கத்தில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' படத்தில் தமிழில் பிரபலமானவர் சர்வானந்த். தெலுங்கு நடிகரான அவர் அதற்கு முன்பு ஓரிரு தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' படம் மூலம்தான் பிரபலமானார். அதற்குப் பிறகு 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை', கடந்த வருடம் வெளிவந்த 'கணம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
சர்வானந்த்திற்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே பிரிந்துவிட்டதாகத் தகவல் பரவியது. அதற்கு சர்வானந்த் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள். கடந்த 40 நாட்களாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படத்திற்காக லண்டன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜுன் மாதம் 3ம் தேதி ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் சர்வானந்த், ரக்ஷிதா திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்குத் திரையலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.