சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு |

ஜோதிகா நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான 'ராட்சசி' படத்தை இயக்கிய கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். டி. இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் பற்றி கவுதமராஜ் கூறியதாவது: மரண தண்டனை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக நிறைவேற்றப்பட்டு வந்தது. சிலுவையில் அறைந்து கொன்றார்கள், தலையைவெட்டி கொன்றார்கள், யானையை மிதிக்க வைத்து கொன்றார்கள். அப்படி தமிழ்நாட்டில் இருந்த ஒரு முறைதான் கழுவேற்றுவது. கழுவேத்தி மரங்கள் இப்போதும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் அதனை தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இப்போதும் கோழிகளை அந்த மரத்தில் பலிகொடுத்து வழிபாடு செய்கிறார்கள். இந்த வழிபாட்டின் பின்னணியை ஆய்வு செய்து அதனை இன்றைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு உருவானதே இந்த படம். இதில் அருள்நிதி மூர்க்கன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு ஊரில் நல்லது கெட்டதில் பங்கேற்பவராக நடித்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் அரசியலும் பேசுகிறார். இந்த படத்திற்காக அவர் எடை கூடி பெரிய மீசை வைத்து நடித்திருக்கிறார். இது ஜாதி ரீதியான படம் அல்ல. சமூக நீதிக்கான படம் என்று சொல்லலாம். என்றார்.




