'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தில்லு முல்லு(2013), மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் இஷா தல்வார். தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உப்பளத்தில் வைத்து ஆக் ஷன் காட்சி ஒன்றை படமாக்கினர். அப்போது இருட்டில் வைத்திருந்த வெடிபொருள் வெடித்ததில் எனது இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. கண்ணை திறக்க முடியவில்லை, வலியால் துடித்தேன். அப்போது மருத்துவரிடம் உடனடியாக சென்று சிகிச்சை பெற்றேன். மூன்று நாட்கள் என்னால் கண்ணை திறக்க முடியவில்லை. அந்தநாட்களில் இருளில் இருந்தது போன்று உணர்ந்தேன். மருத்துவர்கள் உதவியால் நலமாகி வந்துள்ளேன்'' என்றார் இஷா தல்வார்.