'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

தில்லு முல்லு(2013), மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் இஷா தல்வார். தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உப்பளத்தில் வைத்து ஆக் ஷன் காட்சி ஒன்றை படமாக்கினர். அப்போது இருட்டில் வைத்திருந்த வெடிபொருள் வெடித்ததில் எனது இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. கண்ணை திறக்க முடியவில்லை, வலியால் துடித்தேன். அப்போது மருத்துவரிடம் உடனடியாக சென்று சிகிச்சை பெற்றேன். மூன்று நாட்கள் என்னால் கண்ணை திறக்க முடியவில்லை. அந்தநாட்களில் இருளில் இருந்தது போன்று உணர்ந்தேன். மருத்துவர்கள் உதவியால் நலமாகி வந்துள்ளேன்'' என்றார் இஷா தல்வார்.