'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு |
தில்லு முல்லு(2013), மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் இஷா தல்வார். தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛உப்பளத்தில் வைத்து ஆக் ஷன் காட்சி ஒன்றை படமாக்கினர். அப்போது இருட்டில் வைத்திருந்த வெடிபொருள் வெடித்ததில் எனது இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. கண்ணை திறக்க முடியவில்லை, வலியால் துடித்தேன். அப்போது மருத்துவரிடம் உடனடியாக சென்று சிகிச்சை பெற்றேன். மூன்று நாட்கள் என்னால் கண்ணை திறக்க முடியவில்லை. அந்தநாட்களில் இருளில் இருந்தது போன்று உணர்ந்தேன். மருத்துவர்கள் உதவியால் நலமாகி வந்துள்ளேன்'' என்றார் இஷா தல்வார்.