ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

மலையாள சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடங்குவதற்குள் அடுத்த அதிரடியாக மலையாள சினிமாவில் வெளிநாட்டு கருப்பு பணம் புழங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. 4 தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரிடம் இருந்து அமலாக்கத்துறை 25 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களை வெளியிட்ட சில மலையாள ஊடகங்கள் மற்றும் யு டியூப் சேனல்கள் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது நடிகர் பிருத்விராஜ் என்று செய்தி வெளியிட்டன.
இது குறித்து பிருத்விராஜ் வெளியிட்ட பதிவு : ‛‛பொதுவாக இம்மாதிரியான செய்திகளை நான் கடந்து செல்வதே வழக்கம். ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு. வரம்பு மீறிய இந்த அபாண்ட செய்திக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறேன்” என கோபமாக அறிவித்துள்ளார்.




