சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
கடந்த ஆண்டு ஐரோப்பா நாடுகளுக்கு சென்று சுற்றுப் பயணம் செய்த அஜித் குமார் சமீபத்தில் பூடான், நேபாளம் போன்ற நாடுகளில் பைக் ரைடு சென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த உலக சுற்று பயணத்தை அவர் நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சவாலான நிலப்பரப்புகளில் பைக் மூலம் சவாரி செய்து தீவிரமான வானிலையை எதிர்கொண்டுள்ளார் அஜித் குமார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ளார். நேபாளம், பூடான் நாட்டையும் கடந்து சென்றார். அவரது உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார். அதனால் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்திற்குள் அஜித்குமார் முடித்து விடுவார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.