20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
கடந்த ஆண்டு ஐரோப்பா நாடுகளுக்கு சென்று சுற்றுப் பயணம் செய்த அஜித் குமார் சமீபத்தில் பூடான், நேபாளம் போன்ற நாடுகளில் பைக் ரைடு சென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த உலக சுற்று பயணத்தை அவர் நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சவாலான நிலப்பரப்புகளில் பைக் மூலம் சவாரி செய்து தீவிரமான வானிலையை எதிர்கொண்டுள்ளார் அஜித் குமார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ளார். நேபாளம், பூடான் நாட்டையும் கடந்து சென்றார். அவரது உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார். அதனால் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்திற்குள் அஜித்குமார் முடித்து விடுவார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.