தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

மணிரத்னம் இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் தயாரான 'பொன்னியின் செல்வன் 2' படம் கடந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. படம் வெளியான நான்கே நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாகத் தயாரானதாக சொல்லப்படும் இப்படம் முதல் பாகத்திலேயே 500 கோடி வசூலைக் கடந்து பெரும் லாபத்தைக் குவித்துவிட்டது. இந்த இரண்டாம் பாகம் என்பது கூடுதல் லாபம்தான். அது மட்டுமல்ல ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலமே 100 கோடி கூடுதல் வருமானத்தையும் பார்த்தது.
முதல் பாக வசூலான 500 கோடியை இரண்டாம் பாகம் கடக்குமா என்பது சந்தேகமாக இருந்தாலும் 300 கோடி வசூலைக் கடந்து இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த 'வாரிசு' வசூலை இப்படம் நிச்சயம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ள இப்படத்தின் வசூல் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் பாகத்தில் மணிரத்னம் கதையையும், கிளைமாக்சையும் மாற்றிவிட்டார் என்ற கருத்துப் பரவல் படத்தின் வசூலைக் கொஞ்சம் பாதித்துள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.




