ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
தமிழ்த் திரையுலகத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் த்ரிஷா, நேற்று தன்னுடைய 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளை தோழிகளுடன் ஷிர்டிக்குச் சென்று அங்கு கொண்டாடியுள்ளார். சாய்பாபா கோயிலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தையும், கேக் வெட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்து, “உங்களது அளவுக்கதிகமான அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. எனது இதயம் நன்றியுணர்வுடன் வெடிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய ஆன்மீக ஈடுபாடு குறித்து அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத த்ரிஷா நேற்று தன்னுடைய பிறந்தநாளை ஷிர்டியில் கொண்டாடியது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சில நடிகைகள் பார்ட்டி வைத்து கொண்டாடும் பிறந்தநாளை பயபக்தியுடன் கொண்டாடியுள்ளார் த்ரிஷா .