'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். சில ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்ற தொழில் அதிபரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமும் விவாகரத்து பெற்றார்.
இதை தொடர்ந்து யுட்யூப் சேனல் தொடங்கிய வனிதா, அந்த சேனலுக்கு விஷூவல் எடிட்டராக வந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் செய்தார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக பல பிரச்சனைகள் எழுந்தது.
இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பீட்டர் பால் காலமானார். இதுதொடர்பான செய்திகள் வெளியானது. அதில் வனிதாவின் கணவர் என பீட்டர் பால் என அனைவரும் குறிப்பிட்டனர். பீட்டர் பால் மறைவுக்கு அவர் பெயரை குறிப்பிடாமல் இரங்கல் தெரிவித்தார் வனிதா.
இந்த நிலையில் வனிதா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அது அதே ஆண்டு முடிவடைந்துவிட்டது. நாங்கள் பிரிந்துவிட்டோம். நான் பீட்டர் பாலின் மனைவி அல்ல. அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.