கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… |

நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். சில ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்ற தொழில் அதிபரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமும் விவாகரத்து பெற்றார்.
இதை தொடர்ந்து யுட்யூப் சேனல் தொடங்கிய வனிதா, அந்த சேனலுக்கு விஷூவல் எடிட்டராக வந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் செய்தார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக பல பிரச்சனைகள் எழுந்தது.

இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பீட்டர் பால் காலமானார். இதுதொடர்பான செய்திகள் வெளியானது. அதில் வனிதாவின் கணவர் என பீட்டர் பால் என அனைவரும் குறிப்பிட்டனர். பீட்டர் பால் மறைவுக்கு அவர் பெயரை குறிப்பிடாமல் இரங்கல் தெரிவித்தார் வனிதா.
இந்த நிலையில் வனிதா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அது அதே ஆண்டு முடிவடைந்துவிட்டது. நாங்கள் பிரிந்துவிட்டோம். நான் பீட்டர் பாலின் மனைவி அல்ல. அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.




