கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
நடிகை ஸ்ரேயா தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் உள்ளே நுழைந்தார். தற்போது வரை படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டாலும் கூட. கதாநாயகியாக நடிப்பதுடன், சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடவும் செய்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் அவரிடம் இந்த வயதிலும் எப்படி உடலை இப்படி கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.
ஆனால் ஸ்ரேயாவோ, ஏன் நடிகைகளிடம் மட்டும் இப்படி கேட்கிறீர்கள் ?. எந்த ஒரு தெலுங்கு ஹீரோவிடமாவது இப்படி கேட்டிருக்கிறீர்களா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டார். அந்த நிருபரோ இதை உங்களுக்கான பாராட்டாக எடுத்துக் கொள்ளலாமே என்று சாந்தமாக கூறியுள்ளார். ஆனாலும், “இதுவா பாராட்டு? என்னுடைய நண்பர்கள் சிலர் கூட பெண்களை பார்க்கும்போது வாவ் இரண்டு குழந்தைகள் பெற்றபின்னும் கூட இப்படி அழகாக இருக்கிறாயே என்பது போன்று பேசுகிறார்கள்.. இவையெல்லாம் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக பாராட்டு அல்ல” என்று மீண்டும் தனது கருத்திலேயே பிடிவாதம் காட்டினார்.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, தனக்கான ஒரு பாராட்டு என்பதை புரிந்து கொள்ளாதது ஒரு பக்கம் இருக்க, அந்த கேள்விக்கான பதிலாக இன்னொரு கேள்வியை ஸ்ரேயா கேட்டது அந்த நிகழ்வில் கொஞ்ச நேரம் சலசலப்பையும் ஏற்படுத்தியது.