ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை அடுத்து தற்போது இடும்பன்காரி உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். சோசியல் மீடியாவில் தான் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன், தற்போது தான் ஒரு ஆன்மிக பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதாவது தனது சகோதரிகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் சுந்தரி ஆகியோருடன் இணைந்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது கிரிவலமும் சென்று இருக்கிறார். இந்த ஆன்மிக பயணம் புதுமையாக இருந்ததாக தெரிவித்திருக்கும் ரம்யா பாண்டியன், மிகவும் அமைதியான அழகான அனுபவம் கிடைத்தது என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கோவிலில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார் .