அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என பல படங்களை இயக்கியவர் ராம். இவர் தற்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கி வருகிறார். மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. அதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் தான் டப்பிங் பேசிய வீடியோக்களை வெளியிட்டு இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதனால் ராம் இயக்கி உள்ள இந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கிறார்.