சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவருகிறது. தற்போது இதன் புரமோசன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் கீதத்தை (ஆன்தம்) இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.
இதன் வெளியீட்டு விழா நடந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 6000 மாணவர்களிடையே வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி கலந்து கொண்டனர்.
விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது: நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன். ஆரம்பத்தில் இந்த கீதத்தை உருவாக்கியதன் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இல்லை. மணிரத்னம் சார் இந்த ஆல்பத்தை இயக்கும்படியாக ஒரு பாடலை விரும்பினார். அப்போதுதான் இந்த கீதம் உருவாகியது. என்றார்.