பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
காதல் படத்தில் நடித்த சுகுமார், நடிகர் சந்தானம், ‛வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ஆகியோர் நீண்டகால நண்பர்கள். இந்த நிலையில் சுகுமார், நடிகர் சந்தானத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் அவர் பதிவிட்டதாவது: சந்தானத்திடம் ஆறு மாதங்களுக்கு முன் கதையின் ஒன்லைன் சொன்னதற்கு ‛சூப்பர் மச்சி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு சொல்லு' என்று உற்சாகமூட்டினான். சில நாட்களுக்கு முன்பு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு கால் பண்ணியபோது ‛வடக்குப்பட்டி ராமசாமி' படப்பிடிப்பில் இருக்கிறேன் எனக்கூறினான். அப்படியே ஒரு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்தேன்.
கதையை கேட்டதும் ‛நிச்சயமா நாம பண்றோம்' என்றான் சந்தானம். எனது இணை தயாரிப்பாளரிடம் சந்தானம், ‛கதை வேற லெவல்ல இருக்கு. இப்போ நான் இவனுக்கு பண்றது என் கடமை, அவன் இன்னும் நல்லா வரணும். அவன் நினைச்ச மாதிரி படம் வந்தா நாம எல்லாருமே நல்லாருப்போம்' என சொன்னதும் நான் நெகிழ்ச்சியில் கலங்கிப் போனேன். விரைவில் இறை நல்லாசியுடனும் உங்கள் ஆதரவுடனும் அதிகாரப்பூர்வ அறிவுப்புகளோடு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.