300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
காதல் படத்தில் நடித்த சுகுமார், நடிகர் சந்தானம், ‛வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ஆகியோர் நீண்டகால நண்பர்கள். இந்த நிலையில் சுகுமார், நடிகர் சந்தானத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் அவர் பதிவிட்டதாவது: சந்தானத்திடம் ஆறு மாதங்களுக்கு முன் கதையின் ஒன்லைன் சொன்னதற்கு ‛சூப்பர் மச்சி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு சொல்லு' என்று உற்சாகமூட்டினான். சில நாட்களுக்கு முன்பு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு கால் பண்ணியபோது ‛வடக்குப்பட்டி ராமசாமி' படப்பிடிப்பில் இருக்கிறேன் எனக்கூறினான். அப்படியே ஒரு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்தேன்.
கதையை கேட்டதும் ‛நிச்சயமா நாம பண்றோம்' என்றான் சந்தானம். எனது இணை தயாரிப்பாளரிடம் சந்தானம், ‛கதை வேற லெவல்ல இருக்கு. இப்போ நான் இவனுக்கு பண்றது என் கடமை, அவன் இன்னும் நல்லா வரணும். அவன் நினைச்ச மாதிரி படம் வந்தா நாம எல்லாருமே நல்லாருப்போம்' என சொன்னதும் நான் நெகிழ்ச்சியில் கலங்கிப் போனேன். விரைவில் இறை நல்லாசியுடனும் உங்கள் ஆதரவுடனும் அதிகாரப்பூர்வ அறிவுப்புகளோடு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.