அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
காதல் படத்தில் நடித்த சுகுமார், நடிகர் சந்தானம், ‛வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ஆகியோர் நீண்டகால நண்பர்கள். இந்த நிலையில் சுகுமார், நடிகர் சந்தானத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் அவர் பதிவிட்டதாவது: சந்தானத்திடம் ஆறு மாதங்களுக்கு முன் கதையின் ஒன்லைன் சொன்னதற்கு ‛சூப்பர் மச்சி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு சொல்லு' என்று உற்சாகமூட்டினான். சில நாட்களுக்கு முன்பு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு கால் பண்ணியபோது ‛வடக்குப்பட்டி ராமசாமி' படப்பிடிப்பில் இருக்கிறேன் எனக்கூறினான். அப்படியே ஒரு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்தேன்.
கதையை கேட்டதும் ‛நிச்சயமா நாம பண்றோம்' என்றான் சந்தானம். எனது இணை தயாரிப்பாளரிடம் சந்தானம், ‛கதை வேற லெவல்ல இருக்கு. இப்போ நான் இவனுக்கு பண்றது என் கடமை, அவன் இன்னும் நல்லா வரணும். அவன் நினைச்ச மாதிரி படம் வந்தா நாம எல்லாருமே நல்லாருப்போம்' என சொன்னதும் நான் நெகிழ்ச்சியில் கலங்கிப் போனேன். விரைவில் இறை நல்லாசியுடனும் உங்கள் ஆதரவுடனும் அதிகாரப்பூர்வ அறிவுப்புகளோடு. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.