பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படம் கடந்த மாதம் வெளிவந்ததது. மதநல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும் பேசிய இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று சங்கர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு "யாதும் ஊரே" என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதி பதிவு செய்துள்ளேன். அந்த கதையை எனது அனுமதி இல்லாமல் 'அயோத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதை மீதான உரிமம் எனக்கு சொந்தமானது. அதனால், இந்த படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தி படத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன் படம் வெளியாகி அனைத்து உரிமங்களும் விற்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.