சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'அயோத்தி' படம் கடந்த மாதம் வெளிவந்ததது. மதநல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும் பேசிய இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் கதை என்னுடையது என்று சங்கர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு "யாதும் ஊரே" என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதி பதிவு செய்துள்ளேன். அந்த கதையை எனது அனுமதி இல்லாமல் 'அயோத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதை மீதான உரிமம் எனக்கு சொந்தமானது. அதனால், இந்த படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தி படத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன் படம் வெளியாகி அனைத்து உரிமங்களும் விற்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.