ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலூர் கோர்ட்டிலும், மதுரை உயர்நீதி மன்ற கிளையிலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தற்போது தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று புதிய வழக்கு தொடரப்பட்டு, அது நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70 வயதான அவருக்கு முதுமை காரணமாக அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம் என்பதால் கதிரேசன் மனைவி மீனாட்சி தனது கணவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று மருத்துமனை டீனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.