சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலூர் கோர்ட்டிலும், மதுரை உயர்நீதி மன்ற கிளையிலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தற்போது தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று புதிய வழக்கு தொடரப்பட்டு, அது நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70 வயதான அவருக்கு முதுமை காரணமாக அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம் என்பதால் கதிரேசன் மனைவி மீனாட்சி தனது கணவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று மருத்துமனை டீனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.