என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என்று மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலூர் கோர்ட்டிலும், மதுரை உயர்நீதி மன்ற கிளையிலும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்றாலும் தற்போது தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று புதிய வழக்கு தொடரப்பட்டு, அது நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 70 வயதான அவருக்கு முதுமை காரணமாக அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம் என்பதால் கதிரேசன் மனைவி மீனாட்சி தனது கணவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று மருத்துமனை டீனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.