மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்படம் தமிழில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்தப்படம் வரும் ஏப்ரல் 15 அன்று டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. அதற்காக இன்று விடுதலை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் வெற்றிமாறன்.
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியது; ஆடுகளம் படத்திற்கு பிறகு வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தையும் நான் நீக்கி விட்டேன்.
கொரோனோ லாக்டவுன் காலகட்டத்தில் மகேஷ் பாபுவுடன் நிறைய கதைகள் பேசினேன். அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. நான் ஸ்டார்க்காகவோ காம்பினேஷன்காக படம் பண்ண மாட்டேன். கதைக்காக படம் பண்ணுவேன். நான் யோசித்த கதைகளில் ஒரு கதையில் ஜூனியர் என்டிஆர் மாதிரி ஸ்டார் தேவைப்படுகிறது. இப்போது ஜூனியர் என்டிஆர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக படம் பண்ணுவேன். ஆனால் அதற்கு நேரம் ஆகும்".
இவ்வாறு கூறியுள்ளார்.