பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள், 'ஆன்லைன்' வாயிலாக துவங்கப்பட்டுள்ளன. அதற்கு உதவும் வகையில், 'இன்ஸ்டாகிராம்' வலைதளத்தில் கணக்கு துவக்கிய விஜயை, ஒன்றரை மணி நேரத்திற்குள் 10 லட்சம் பேர் பின்தொடரும் சாதனை நடந்துள்ளது.
இதில் உலக அளவில், மூன்றாம் இடத்தில் விஜய் இருக்கிறார். தற்போது, அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், வரும் 14ல், அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று, மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம்தோறும் நடக்கும் இவ்விழாவில், அனைத்து அணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றும், முன்கூட்டியே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலர் புஸ்சி ஆனந்த், நேற்று நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசியல் ஆசையோடு இருக்கும் விஜய், அதற்கு முன்னோட்டமாக தலித் சமுதாயத்தின் ஆதரவை பெறும் நோக்கில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.