இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் 'குற்றப் பரம்பரையினர்' என்று அறிவிக்கப்பட்டு கொடூரமான சித்ரவதைகளை அனுபவத்தனர். சுதந்திரத்திற்கு பிறகுதான் குற்றம்பரம்பரையினர் என்ற அடையாளம் நீக்கப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளது. தற்போது நடிகராக உள்ள வேல ராமமூர்த்தி குற்றப்பரம்பரை என்ற பெயரிலேயே நாவல் ஒன்றை எழுதி உள்ளார். ரத்னகுமார் என்பவரும் எழுதி உள்ளார்,
இதில் வேல ராமமூர்த்தியின் நாவலை பாலாவும், ரத்னகுமார் கதையை பாரதிராஜாவும் இயக்குவதாக அறிவித்தார்கள். ஆனால் இருவருமே இந்த பணிகளை தொடங்கவில்லை. அவரவர் வெவ்வேறு படங்களில் பிசியாகி விட்டார்கள். இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் குற்றப்பரம்பரையை வெப் தொடராக இயக்க இருப்பதாக அறிவித்தார்.
தற்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த தொடரை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரித்து, ஒளிப்பதிவு செய்கிறார், வேல ராமமூர்த்தி இதற்கான திரைக்கதை, வசனம் எழுதுவதோடு அவரே முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்க நடிகை தேர்வு நடந்து வருகிறது. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். அடுத்த மாதம் மதுரையை சுற்றியுள்ள மலை கிராமங்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது.