சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில்..நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் குலதெய்வ வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூரில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் குலதெய்வ கோயிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்த நடிகை நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த இரண்டு ஆண் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு உயிர்ருத்ரோநீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் தனது குலதெய்வ கோயிலான வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் பொங்கல் வைத்து, சாமிக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர்.
நயன்தாரா கோவிலுக்கு வந்த உடனே இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் குவிந்து விட்டனர். அய்யம்பேட்டை போலீஸ் ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.