தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில்..நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் குலதெய்வ வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூரில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் குலதெய்வ கோயிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்த நடிகை நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த இரண்டு ஆண் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு உயிர்ருத்ரோநீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் தனது குலதெய்வ கோயிலான வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் பொங்கல் வைத்து, சாமிக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர்.
நயன்தாரா கோவிலுக்கு வந்த உடனே இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் குவிந்து விட்டனர். அய்யம்பேட்டை போலீஸ் ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.