தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவக் கதையா ராதிகாவின் ‛காலனி' | பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம் | ஜனநாயகன் லீக் ; எடிட்டர் காரணமா... குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் : ஆர்கே செல்வமணி பேட்டி | உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நயன்தாரா மீது எழும் விமர்சனங்கள் | ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து? கமல் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்? | ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியது | லீடர், காளிதாஸ் 2, ஹாப்பி ராஜ் படங்கள் மற்றும் கடந்த வார படங்களின் நிலை என்ன? | படம் பிடித்தால் பாருங்க, இல்லைன்னா வேணாம் : மிஸ்டர் எக்ஸ் இயக்குனரின் புதுப்பிரச்சாம் | மாஸ்டர் 2..., லியோ 2... உருவாகிறதா... : மீண்டும் நடிக்கிறாரா விஜய்...? | பிரசாந்த், ஹரி கூட்டணியின் படம் என்னாச்சு |

தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. திருமணம் முடிந்து குழந்தைக்கு தாயாகி உள்ள அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் நடிகையாக இருந்து தாயாகவும் மாறி இருக்கிறேன். உடலின் நிறத்தை வைத்தோ, தலைமுடி நரைத்து விட்டதை வைத்தோ ஒரு மனிதரை மதிப்பீடு செய்வது அநாகரிகம். வெள்ளை முடியையும், தாயான பிறகு வயிற்றின் மீது ஏற்படும் கோடுகளையும் மறைக்கும் முயற்சியை நான் எப்போதும் செய்யவில்லை, பெண்கள் ஆரோக்கியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் இருக்கும் அனைத்து உணவு பிளானையும் அமல்படுத்தக்கூடாது. முதலில் நாம் நமது உடலோடு பேச வேண்டும். உடல் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை பழக்கமாக்கிக்கொண்டேன். என் அப்பா டிரை புரூட்ஸ் சாப்பிட பழக்கப்படுத்தினார். நானும் என் குழந்தைகளுக்கு அதையே ருசி காட்டினேன்.
நான் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவர்களும் அதே வழியை அனுசரிப்பார்கள். நாம் நொறுக்கு தீனியை விரும்பினால் அவர்களும் அந்த குப்பையோடு வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். பெண்கள் ஆரோக்கியத்தின் மீது குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.




