பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் ஆர்ஆர்ஆர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றது. அதே சமயம் அந்த ஆஸ்கர் விழா மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் இந்த படத்தைப் பற்றி குறிப்பிடும்போது பாலிவுட் படம் என குறிப்பிட்டார்.
பொதுவாக இந்திய படங்களை வெளிநாடுகளில் பாலிவுட் படம் என்பதாகவே பெரும்பாலும் குறிப்பிட்டு வருவதால் தவறுதலாக அவர் இப்படி குறிப்பிட்டு விட்டார். ஆனால் தங்களது தெலுங்கு திரையுலகத்தின் அடையாளம் பெருமை அந்த விழா மேடையில் மறைக்கப்பட்டு விட்டதே என கொந்தளித்த தெலுங்கு ரசிகர்கள் இதை அப்போது கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழ் படம் என்று குறிப்பிட்டு தன் பங்கிற்கு தெலுங்கு ரசிகர்களை இன்னும் டென்ஷன் ஆக்கி உள்ளார்.
அவர் பேட்டி அளித்தது வெளிநாட்டு சேனல் என்பதால் வழக்கம் போல அதன் தொகுப்பாளர் பேசும்போது, பாலிவுட் சினிமா தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டது. மிகப்பெரிய ஆக்சன், காதல் கூடவே நடனம் என்று..” என அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த பிரியங்கா சோப்ரா, “ஆர்ஆர்ஆர் படத்தை பற்றி தானே சொல்கிறீர்கள்.. பை தி வே அது ஒரு தமிழ் படம்” என்று கூறியதுடன், 'தமிழில் இதுபோன்ற பெரிய மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களை உருவாக்குகின்றனர்” என்று கூறினார்.
இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் சில பேட்டிகளில் ஆர் ஆர் படத்தை தமிழ் படம் என்று கூறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது அவர் இப்படி குறிப்பிட்டதை கேள்விப்பட்டு சோசியல் மீடியாவில் தெலுங்கு ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்