சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளியான திரைப்படம் பத்து தல. இந்த படத்தை காண நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என டிக்கெட் சரிபார்பவர் உள்ளே அனுமதிக்காமல் இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
தொடர்ந்து அந்த ஊழியரை கண்டித்தும், ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தையும் கண்டித்தும் சமூகவலைதளங்களில் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகம் ஒரு விளக்கத்தையும் கொடுத்தது. இந்தப்படம் யு-ஏ சான்று படம். நரிக்குறவர்கள் சிறு குழந்தைகளை அழைத்து வந்ததால் அனுமதிக்கவில்லை என்றனர். அதேசமயம் பின்னர் அவர்கள் அனைவரையும் படம் பார்க்க வைத்ததாகவும் வீடியோவையும் வெளியிட்டனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு மதுரையில் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "எந்த ஒரு மனிதனும் ஒடுக்கப்படுவதும் ஏற்று கொள்ள முடியாது. இந்த பூமி மனிதர்கள் எல்லோரும் வாழ்வதற்கு படைக்கப்பட்டது. வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் தவறு தான்" என்றார்.