‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் முடித்து சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையும் ஆனார். விரைவில் ராஜ் கமல் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் ஒன்றை இயக்கிவுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் அக்கவுண்டை மீட்கப்பட்டுள்ளதாக டுவீட் செய்துள்ளார். அவர் கூறியது " இன்று என் டுவிட்டர் கணக்கை மீட்டுள்ளேன். ஆனால் டுவிட்டர் கணக்கு இல்லாத இந்த ஒரு வாரம் நிம்மதியுடன் இருந்தேன். என் அக்கவுண்ட் ஹேக் செய்தவர்களுக்கு நன்றி. அப்பப்ப பண்ணுங்க(ஹேக்) என பதிவிட்டுள்ளார்". அதோடு அவரது குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் இப்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.