லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் தங்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் குழந்தை பிறப்பு பற்றி அரசாங்கம் இயற்றிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அது பற்றிய விசாரணை நடந்து எந்த விதி மீறலும் இல்லை என அறிவிக்கப்பட்ட பின் அந்த சர்ச்சை அடங்கியது.
தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் என்ன பெயர் வைத்தார்கள் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “உயிர், உலகம்” என்பதைக் குறிப்பிடும் வகையில், “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். இதை விக்னேஷ் சிவன் இன்ஸ்டா வாயிலாக உறுதிப்படுத்தி உள்ளார்.